கலாம் உன்னை காலம் மறக்காது

காலம் காலமாய் பிறப்பதும் இறப்பதும்
இயற்கையான நிகழ்வுதான் -
இருந்தும் விதிவிலக்காய் ஒரு சிலர் மட்டும்
நீர் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பீர் ............

கலாம் நீர் காலத்தால் அழிபவர் அல்ல
எக்காலத்திற்கும் வாழ்பவர்
எங்கள் அணுக்களில் அணுக்களாய்
வாழப்போகும் அணு ஆராய்ச்சி மனிதர் ............

அறிவியலை மட்டும் நீர் ஆராயந்தவறல்ல
மனித அறிவினையும் ஆராயந்தவராயிற்றே
அதனால்தான் மனிதநேய அவசியத்தை
மனிதருக்குள் விதைத்து சென்றிருக்கிறீர் ..............

அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்த பொழுதும்
பணிவின் உச்சத்தை பண்புடன் காட்டியவன்
சமுதாய சீர்திருத்த கொள்கைகளை
படிப்பித்த கால சக்கரமும் நீ ...........

இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து
தலை கோடிக்கு உயரும் தகுதி
உன்னுள் நீ கொண்டிருந்த நம்பிக்கை
உனக்கு பரிசாய் தந்தது ...............

சம்பவ பிறப்பும் சரித்திர இறப்பும்
எதுவென்று இளைஞனக்கு புரியவைத்த சாணக்கியன் நீ
84 வயதிலும் குழந்தையாகவே
வாழ்ந்ததுதான் உன் வரலாற்று சாதனை .............

நேருவிற்கு பிறகு குழந்தைகள் நேசித்த
மாமனிதன் நீ
இளைஞனின் இயக்கம்
ரத்த ஓட்டம் நீ ............

எத்தனை ஆண்டுகள் இல்லை
எத்தனை யுகங்கள் ஆகப்போகிறது தெரியவில்லை
உன்னைபோன்ற ஒரு கலாம் உலகத்தில் பிறக்க
அதுவும் தமிழனாய் பிறக்க ............


அன்புடன்
கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (29-Jul-15, 8:45 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 65

மேலே