அம்மாவுக்கு

நீ..
வழிதவறி..
சென்றதற்கு,
நான் வந்த வழி..
தவறென்று..
கிழிந்த காகிதங்களின்..
ஊடே..வீசிப்போன..
உன் முகம்..
நினைவில் இல்லை..
அம்மா.!
??????????????????????????????????

காக்கையும்..
குருவியும்..
ஊட்டுவதை அறிந்திருக்க..
என் பசி அறியா..
முலையுடன்..
நீ எங்கே அம்மா..
தலைமறைவானாய்.?
?????????????????????????????????

நீ..
யாரோடோ..
இரவில் எழுதிய கவிதையில்..
நான் எழுத்துப்பிழையா..
அம்மா.?
????????????????????????????????

ஏதோவொரு..
தொட்டிலில்..
படுக்கவைத்தால்..
போதுமென்றா..
என்னை படுக்கவைத்தாய்..
குப்பைத்தொட்டிலில்..?
??????????????????????????????

பல்முளைக்கா..
இந்தப்பாலகனை..
கோரப்பல் கொண்ட..
நாய்களின் நடுவே..
எப்படிஅம்மா..
வைத்துப்போக மனம்வந்தது
உனக்கு.?
?????????????????????????????

வைத்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல்..
சென்றுவிட்டாயா...?
இல்லை
எட்ட நின்று..
பார்த்து அழுதாயா..
அம்மா.?
????????????????????????????

எங்கு இருக்கிறாய்..
எனத்தெரியாது.!
ஆனால்..
எங்கேனும்..
குப்பைத்தொட்டி..
கண்டால்..
எட்டிப்பார்க்காமல்..
கடந்து போய்விடு..

ஏனெனில்
எந்தக்குப்பையும்..
என்னை..
நினைவுபடுத்திவிடக்கூடாது
உனக்கு.!
????????????????????????????????

எழுதியவர் : நிலாகண்ணன் (6-Aug-15, 3:32 pm)
Tanglish : ammavuku
பார்வை : 259

மேலே