காதலில் ஓர் தவிப்பு
பேசும் விழி கொண்டவனே..
உன்னிடத்தில்
காதல் மொழி பகிர வந்தேன்..
காத்திருப்பாயா சற்று கண்மூடி நீயும்..
நேத்திரத்தை நீ திறந்தால்
நாணத்தால்
பேசும் திறன் அற்றவளாவேன்...
புருவம் என்னும் தனுசு எடுத்து
பார்வை என்னும் கணை தொடுத்து
கொய்திடுவாய் என் குரல்வளையை..