அம்மா
அன்று .............
நிலவைக் காட்டி
உணவை ஊட்டியவள்
அம்மா !
இன்று ..........
மதுவை கொடுத்து
மக்களை கெடுத்தவள்
அம்மா !
பொது இடத்தில்......
புகை பிடிப்பது தவறு
என்றால் ......
மது குடிப்பதும் ?
தவறுதானே .....
அல்ககால் .........
அணுவைவிட ஆபத்தான
ஆயுதம் !
பொருள் ஈட்ட
பூமியில் எத்தனையோ ?
வழிகள் இருக்கும்போது
மதுவை விற்றுத்தான்
மக்களை காக்க
வேண்டுமா ?
இளைஞ்சர்கள்.........
தேசத்தின் தூண்கள்
எனச்சொல்லிவிட்டு
தூண்களை.....இப்படி
துவலவிட செய்யலாமா
குடிப்பவர்களை ..........
விட்டுவிடுங்கள் - இனி
பிறப்பவர்களை.......
காப்பாற்றுங்கள் .......