அம்மா

அன்று .............
நிலவைக் காட்டி
உணவை ஊட்டியவள்
அம்மா !

இன்று ..........
மதுவை கொடுத்து
மக்களை கெடுத்தவள்
அம்மா !

பொது இடத்தில்......
புகை பிடிப்பது தவறு
என்றால் ......
மது குடிப்பதும் ?
தவறுதானே .....

அல்ககால் .........
அணுவைவிட ஆபத்தான
ஆயுதம் !

பொருள் ஈட்ட
பூமியில் எத்தனையோ ?
வழிகள் இருக்கும்போது
மதுவை விற்றுத்தான்
மக்களை காக்க
வேண்டுமா ?

இளைஞ்சர்கள்.........
தேசத்தின் தூண்கள்
எனச்சொல்லிவிட்டு
தூண்களை.....இப்படி
துவலவிட செய்யலாமா

குடிப்பவர்களை ..........
விட்டுவிடுங்கள் - இனி
பிறப்பவர்களை.......
காப்பாற்றுங்கள் .......

எழுதியவர் : இரா. மாயா (12-Aug-15, 5:50 pm)
Tanglish : KAAPAATRUNGAL
பார்வை : 61

மேலே