வாழ்க்கையின் சாலை

கண்ணும் பெண்ணும்
காதலின் முகவுரை
கடமையும் சடங்குகளும்
கல்யாணத்தின் அணிந்துரை

காதலும் கல்யாணமும்
வாழ்க்கையின் முன்னுரை.
காலதேவன் கூட்டும்
குடும்பமே மூன்றாம் பிறை.

இமைகள் புதிதாய்
உயிர்க்கும் ஒலி அலை
பரவசம் பரிதவிக்கும்
பாசத்தின் பண்பலை

பரிணமிக்கும் பரிணாமம்
மெருகேற்கும் சிற்றலை
உயிரோடும் உறவோடும்
உணர்வு சீர்பட பல்கலை

சுற்றமும் நட்பும் சூழ்
கொண்ட பயனிலை
சேர்வது பிரிவது
செழுமையான வாழ்நிலை

அமைதியும் அன்பும்
அரங்கேறும் வாழ்வியல்
ஆர்ப்பரித்து அலையாடும்
அழகே வானவில்

இளமையில் இருந்து
முதுமைக்கு பயணிக்கும்
மனதும் மயக்கமும்
ஞானத்தில் முறுவலிக்கும்

அருளை வரவாக்கும்
பொருளை செலவாக்கும் வாழ்க்கை
இருளில் மயங்கும்
பொழுதில் தெளியும்
போதும் போதும் என பொங்கி மங்கி
தங்கும் ஜீவனே வாழ்க்கை!

எழுதியவர் : செல்வமணி (13-Aug-15, 12:54 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : valkaiyin saalai
பார்வை : 90

மேலே