ஆகஸ்ட் 15

அடிமை தீயில்
அனல் காற்றாய்
அந்நியனின் ஆதிக்கமே !

வெற்றுடம்பில் சவுக்கடி
வெள்ளையனின் வெறியாட்டம்
பட்டதெல்லாம் நம் மக்கள்
பட்டறிவு பெறாததாலே !

வறுமை எனும் பிடியினிலே
சிக்கிவிட்ட நம்மினத்தை
அடிமை எனும் அக்கினியே
பொசுக்கிவிட பார்த்தனவே !

கொடுமையிலும் கொடுமையடா
சொந்த மண்ணில் அடிமையடா
குள்ளநரி கூட்டமடா
குறி பார்த்து சுட்டதடா !

பெரு வெள்ளக் கூட்டத்தின்
பேரணியை பொறுக்காது
குறு நரியன் டயர் துரையின்
கொலை வெறியே வாலாபாக் !

பொருத்ததெல்லாம் போதுமடா
பொங்கியெழு என் தோழா !

அகிம்சையெனும் ஆயுதத்தால்
காந்தி எனும் போராளி
அறவழியில் போராடி
பெற்றுவிட்ட சுதந்திரம்தான்
ஆகஸ்ட் 15!

எழுதியவர் : கவி ஆறுமுகம் (13-Aug-15, 12:52 pm)
பார்வை : 1227

மேலே