இனிய வரவேற்பு கவிதைகள்

ஒளி கொண்ட இதயங்களே .....
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ஒற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ஒற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ஒளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ஒளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ஒளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
ஒடுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Aug-15, 7:52 am)
பார்வை : 1007

மேலே