காதல்

காதல்

இத்தனை காலம் காதல்

என்னை விட்டு

பிரிந்து வெகு துரமாக

இருந்தது .....


இப்பொழுது காதல்

என் அருகாமையில்

உள்ள பொழுது

காதலை விட்டு

நான் வெகு தொலைவில்

சென்று விட்டேன் ...



நான் பொடி நடையாக

என் காதல் வானத்தில்

விதி உலா வரும் பொழுது

என் ஆகாயத்தில்

நீ நெருப்பு மூட்டினாய்

இறைவா !.....


நான் என்ன பாவம்

செய்தேன்

என்னிடம் உள்ள

கொஞ்ச காதலை யாசகமாக

நி பெற்று சென்று விட்டாய் இறைவா !

ஒரு வேளை இதை தான்

இந்த மதியின்

விதியாக நி எழுதினாய இறைவா !


இதுவும் எனக்கு சுகம் தான்

இந்த உயிரே நே அளித்தது தானே


எந்தன் ஆன்மா

என்றும் உந்தன்

அன்பின் ஆகாயத்திற்கும்

அடிமை இறைவா !.........

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (20-Aug-15, 3:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 91

மேலே