உறவும் - திருமணமும்

முன் சந்திப்பின்றி
இரு மனம் சேர்கின்ற
திருமணங்கள் எல்லாம் - உறவெனும்
ஓவியத்தில் என்றும்
ஒட்டாத நிறப்பிறகைகள் ..,!

ததும்பும் காதலோடு,
இணைகின்ற திருமணங்கள்
எல்லாம் - நீ + நான் = நாம்
எனச்சொல்லி மற்ற உறவுகளைத்
தள்ளிநின்று பார்க்கின்ற
உணர்வுகள்...!

என் முறையவள்- என் முறையவன்
என்று முன் சந்திப்பில்
ததும்பும் காதலை
சொல்லாமல் சொல்லி, ஒரு கையில்
உறவோடு மறு கையில்
காதலோடு
கைக்கோர்க்கும் திருமணங்கள்
எல்லாம்- உறவுகளை என்றும்
தன் உணர்வுகளாய் பார்க்கின்ற
உயிர் ஓவியங்கள் ..!


குறிப்பு : ஒரு சில பெண்களை தவிர ....

எழுதியவர் : தாமு (26-Aug-15, 11:25 am)
பார்வை : 66

மேலே