ரக்ஷாஸ பந்தன்

கழுத்தில் கட்டிட வாங்கிய கயிறை
இழுத்து கையில் இறுக்கிக் கட்டியே
அழித்தாய் அவன் அனுதினக் கனவை
பழியும் கொண்டாய் பகடம் பேணி

கண்ணா எனும் கனிமொழி களைந்து
அண்ணா என்றே அழைத்து அழித்தாய்
மண்ணாய் போனது மனதில் கோட்டை
பெண்மனம் கல்லென பெயரும் பெற்று

எழுதியவர் : வாசு சீனிவாசன் (29-Aug-15, 6:37 pm)
பார்வை : 55

மேலே