சொர்ப்பனத்தில் சொர்க்கம் கண்டேன்

ஒரு இராத்திரி கண்ணைக்கசக்கி
புரண்டு படுத்த ஒருகணம்
யாரோ என்னை தேடுவது போல
ஒரு உணர்வு
என் ஜீவிதத்தில் காணாத ஒரு உருவம்
என்னை இலட்சனை கண்டு
கழுத்தில் கைப்பட நினைவற்றேன்
கரடு முரடான சுரங்குப்பதை
அழைத்துச்சென்றது
அழகிய அரங்கம்
அழகிகள் நிறைந்த கூடம்
ஆருயிர் உயிர்பெற்ற உருவம்
விசாரணைக்கூண்டில்
குறை கணிக்க முடிய தேவன்
அமர்ந்திருக்க
இரு பக்கம்
மயில் தோகை தென்றல் வீச
மகுடமணிந்த மகாதேவன்
விசாரணை தொடர
பவ புண்ணியங்கள் கணிக்க
பூலோக நிகழ்வை காண பணிக்க
ஏங்கித்தவிக்கும் உறவுகளும்
தாங்கித்தவிக்கும் பேழையும்
அன்னை மட்டும் நினைவுற்று இருக்க
மாப்பிள்ளை போல அலங்கரிக்கப்பாட்டு
மணப்பெண்ணின்றி
ஒப்பாரிகளுடன் உறவுகள்
கசிந்த கண்களுடன்
திசை திரும்ப அரங்கம்
ஒரு தலைமுடி ஏழாகப்பிளந்த பாதை
இரு ஓரங்களில் துடிக்கும் மனிதர்களெல்லாம்
கணவனுக்கு துரோகம் இழைத்த மனைவிக்கு
அக்கிணித் தூண்களில் பிணையப்பட்ட நிலை
பலவந்தமாக பாலியல் செய்தோருக்கு
பதை பதைக்க எரியும் நெருப்பில்
பெண்களை ஏமாற்றியோருக்கு
அரக்கிகளோடு திருமணம்
பாவப்பதிப்பிற்கு பிராயச்சித்தம் செய்தோருக்கு
நந்தவனம் காத்திருந்தது
கர்ம வினை இல்லாது
தர்மம் புரிந்தோருக்கு சொர்க்கம் செல்ல
பச்சைதேர் காத்திருந்தது
என் தீர்ப்பு அறியமுன்
என் விழி திறந்தது
திடீரென்று எழுந்து திகைத்து நானிருந்தேன் .....