பூவும் நானும்
என்னவளின் சுவாசத்தில்
மலர்ந்தது
நான் மட்டும் அல்ல
நீயும் தான் !
என்னவளின் புன்னகையில்
தன்னை இழப்பது
நான் மட்டும் அல்ல
நீயும் தான் !
என்னவளின் அழகிய பேச்சில்
வீழ்ந்து போவது
நான் மட்டும் அல்ல
நீயும் தான் !
என்னவளோடு காலம் முழுவதும்
இருக்க ஆசைப்படுவது
நீ மட்டும் அல்ல
நானும் தான் !!!!!!!!