வெளி விருத்தம் ---அன்னை எனும் தெய்வம்

அன்பும் பண்பும் அள்ளித் தந்தாய் --- நான்வாழ
அன்னை உன்னை அகிலம் போற்றும் --- நான்வாழ
என்னை பெற்ற என்றன் தெய்வம் --- நான்வாழ
மன்றில் நானும் மகவாய் பிறந்தேன் ---நான்வாழ .

உதிரந் தன்னை உணவாய்த் தந்தாய் --- நான்வாழ
உதிரா வண்ணம் உள்ளன் போடு -- நான்வாழ
கதியாய் நீதான் காக்கின் றாயே --- நான்வாழ
எதிலும் நிறைந்தாய் என்றன் உயிராய் --- நான்வாழ .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Sep-15, 11:39 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 83

மேலே