காலமெல்லாம் காப்பவன்

இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...!


பரமன் மகனாம் பெரியவனை
பானை வயிற்றுக் கரிமுகனை,
உருவில் பெரிய கணபதியை
ஊரெலாம் காக்கும் குணநிதியை,
வரும்பகை யழிக்கும் வல்லவனை
வானவர்க் கெல்லாம் மேலவனை,
கரமது கூப்பி வணங்கிடுவாய்
காலமும் காப்பான் ஐங்கரனே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Sep-15, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 380

மேலே