மெல்ல நகர்ந்தாலும்

ஒரு மதிய வேளை உறக்கம் போல்
எந்தக் கவலையுமின்றி
நகர்ந்து கொண்டிருந்தது
நேரம்..

சாலையோர நாய்க் குட்டி ஒன்று
அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க..
அதைக் கடக்கும் வேளையில்
கதிரவனின் கிரணங்கள்
எழுப்பி விட்டுப் போனபின்..
ஏற்பட்ட பசியில்..
..
நாய்க்குட்டி ..
..
எங்கிருந்தோ ஓடி வந்து
பால் கொடுக்க துவங்கும்
அதன் தாய்..
..
காற்றில் கடத்தப்பட்ட
தகவல்..ஏதுமில்லை
ஏதோ ஒன்று..
அதுதானே தாயின்
பலம்!

எழுதியவர் : கருணா (21-Sep-15, 4:28 pm)
பார்வை : 143

மேலே