கண்ணீர் வடுக்கள்
" கண்ணீர் வடுக்கள் "
இது இரண்டாவது தடவை
கூட்டத்தில்
ஓடும் உன்னை
தேடித் துரத்துவது யார் ?
என் எதிரி கடவுளா ?
நீ தெரிகிறாய்
ராஸ்கல் கடவுள் தெரியவில்லையே
கனவில் நீ
கனவைக் கலைத்தது - உன்
கண்ணீர் தான்
உன் நினைவை கவிதையாய் எழுதுவது
என் நனவுக் கண்ணீர் தான்
விழி திரட்டும் கண்ணீரே
விலை என்ன நான் தரவேண்டும்
விரைந்தே தான் தந்திடுவேன் - அதற்குள்
வினை(மரணம்) தரவா வந்திடுவாய்
எனை அலங்கரிக்கும் உன் உருவாம் என் நினைவே
கன்னங்களில் இருப்பது காயம் அல்ல
அழியாத காதல் தான்
கண்ணீர் வடுக்களாய்....
( கொசுறு : அடிக்கடி கனவு வருவதும்
அதில் நீ வருவதும்
அகிலத்துக்கு அழகல்ல...)