தண்ணீர் கண்ணீர்
நிலத்தினுள் குடியிருந்த நீரும்
இப்போது
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பணமாக குளிர்பான பாட்டில்களில்...
ஆலைக் கழிவுகளாலும், வேதி
உறங்களாலும்
மாறிய
உயிர் காக்கும் நன்னீரும்
உயிர் குடிக்கும் நச்சு நீராக
வறண்டுப் போன ஏரிகளில்
வளமாக வளர்கின்றன
வானுயர்ந்த கட்டிடங்கள்....
ஓடைகளும் கோடையில்
ஓய்வெடுத்துக் கொண்டன
ஆனால் நிரம்பி
கிடக்கிறது!
மணல் லாரிகளாக......
தண்ணீர் தரிசனமில்லா
தரிசு நிலங்கள்.....
வறட்சி வற்றாது
உலகுக்கு உணவளிக்கும்
உழவனின் கண்களில்
கண்ணீர்........!