துணையாய் நீயும் வாழ்ந்திடுவாய் --- முச்சீர் சமநிலைச் சிந்து

இன்பம் தன்னை தந்திடுவாய் -- என்றும்
------------ இறுதி வரையில் வந்திடுவாய் .
துன்பம் என்னுள் போக்கிடுவாய் -- என்றும்
----------- துணையாய் நீயும் வாழ்ந்திடுவாய் .


ஏக்கம் கொண்டாய் தனிமையிலே --- நீயும்
----------- ஏற்றாய் துன்பம் இளமையிலே .
தூக்கம் விடுத்தாய் காதலினால் --- நீயும்
----------- துயரம் கொண்டாய் தாபத்தினால் .


வணங்கும் தெய்வம் மொழிகேட்கும் -- நாளும்
------------ வந்தே உனையும் காத்துநிற்கும் .
மணக்கும் வாழ்வு மலர்ந்துவிடும் .
----------- மங்கா சிறப்பும் புலர்ந்துவிடும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Sep-15, 11:08 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 106

மேலே