காதல் தீவிரவாதி
காதலெனும் விமானம் கொண்டு
என் இதயம் துளைத்த
தீவிரவாதியே..!
சம்மதம் கிடைக்காவிடில்
தற்கொலைப்படையாவேன் என்ற
பயங்கரவாதியே..!
காதல் தீயைப் பற்றவைத்து
என் மனதைச் சிதைத்த
வன்முறையாளனே..!
எத்தடைகளையும் தகர்த்தெரிவேன்
என்ற சூளுரையில்
போர்க்குணம் கொண்டவனே..!
பார்த்த பெண்ணை மணம்புரியாவிடில்
சொத்து இல்லையென
அப்பா அறிவித்தபோது மட்டும் ஏன்
அகிம்சாமூர்த்தியானாய்?
___________________________________________
ரவி சுவாமிநாதன்
Friday, August 15, 2008