கல்விக் கடன்

கல்விக் கடன்
கேட்டு,
கடந்த
இரு ஆறு மாதமாய்,
வங்கி வாசலுக்கு...
நடந்து, நடந்து
செருப்பாய்
தேய்ந்தேன்......

கல்லால் அடிக்காத
குறையாய்....
வங்கி அதிகாரிகள்
விரட்டி அடித்தனர்
நாயாய்......!

கடைசியில்,
எங்க அப்பாவுக்கு
தெரிந்த
ஆடு மேய்க்கும்
ஆயரிடம்...
"கல்லூரியில்
காசு கட்ட,
கடனாக பணம்
வேண்டும்" என்றேன்....!!

அன்பாய்
அருகில்
அழைத்த
ஆயர்,
ஆர்வமாய் சொன்னார்....
"இதை நேற்றே
கேட்டிருந்தால்....
இந்நேரம்,
ஒரு
ஆட்டை விற்று
இருப்பேன்" என்று.........!!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (20-Oct-15, 9:15 pm)
Tanglish : kalvik kadan
பார்வை : 92

மேலே