தமிழ் மொழி பிறந்த கதை

அ,ஆ,இ, ஈ. உ, ஊ, எ, ஏ, ஐ, ஔ, (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர்,ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும் போது காற்றின் பங்கை விட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216, ஆயுத எழுத்து 1, தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதை காண்போம்

க, ச, ட, த, ப, ற, -ஆறும் வல்லினம் ங, ஞ, ண, ந, ம, ன, -ஆறும் மெல்லினம் ய, ர, ல, வ, ழ, ள, ஆறும் இடையினம்

உலக மாந்தன் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்

அ (படர்க்கை),
இ (தன்னிலை) உ (முன்னிலை) என்பது பாவாணர் கருத்து

தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களை தேர்ந்தெடுத்தனர். அவை த், ழ், ம், என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப் படுத்தி முறையே கூட்டி த்+ஆ கூடி 'த ' வாகவும் ம் +இ கூடி ' மி ' யாகவும் ழ் +உ கூடி ' ழு ' வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்,

எழுதியவர் : விக்னேஷ் (25-Oct-15, 12:33 pm)
பார்வை : 2731

மேலே