தனிமையுணர்வை மாற்றினாள்

சன்ன லோர இருக்கையில்
***சாய்ந்துக் கண்ணை மூடினாள்!
என்ன இந்த வாழ்வென
***எரிச்சல் கொண்டு வாடினாள்!

அன்புக் காட்டி மறுத்தவன்
***அமைதி பறித்துப் போகவே
சின்ன மனத்தில் வேதனை
***சிறகு விரிக்க ஏங்கினாள்!

கன்னந் தழுவும் தென்றலால்
***களைப்பு மெல்ல நீங்கினாள்!
புன்ன கையைத் தொலைத்தவள்
***புதிதாய் மூச்சு வாங்கினாள்!

தன்கை என்று முதவிடும்
***தவித்த நெஞ்சைத் தேற்றினாள்!
தன்னம் பிக்கைத் துணைவர
***தனிமை யுணர்வை மாற்றினாள்...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Oct-15, 12:27 am)
பார்வை : 325

மேலே