சோலை மகள்

சோலைமலை ஓரத்திலே
சோலைமகள் ஓய்யாற நடைபயில
நுபுர கங்கையிலும் நுரை பொங்க தீர்த்தமாதமாட
சோலைமலை முருகனையும்
சொக்கிபோய் வணங்கிவிட்டு
சோலைமலை காட்டோரம்
மெய்மறந்து உலவுகையில்
என்னையே பார்த்துக்கொண்டு
ஒரு அழகான சிறு குழந்தை
என்னை ஏக்கமா பாத்துக்கொண்டு
மனம் நெகிழ்து சென்றேன் அருகில்
பாசத்துடன் பிஸ்க்கெட் தந்தேன்
நன்றியுடன் நோக்குகிறான்
மகிழ்ந்து நான் சிரிக்கையிலே
குழந்தையும் தான் சிரிச்சிடிச்சே
அழகான பல் தெரிய
அள்ளி நான் தூக்கி அவன் உதட்டில்
முத்தமிட்டேன்
என்னதான் நினைச்சானோ
பதிலுக்கு முத்தமிட்டு துள்ளி
தத்தி ஓடிட்டானே
என் உதட்டையும் எடுத்துக்கொண்டு

பாசமுள்ள குரங்கு மகன்

எழுதியவர் : செல்லம் சௌம்யா (29-Oct-15, 7:21 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : solai magal
பார்வை : 52

மேலே