காதல் பிரிந்த பின் - 3

உன் நினைவு ஒவ்வொன்றும்
என் தாழிடப்பட்ட ஆழ்மனதில்
சுகமாய் உறங்கியபடி...
தலையணையில் முகம் புதைத்து
தழுவிக்கொள்கிறேன்
உன்னை முழுவதும்
கற்பனைக்கனவினில்...

சட்டென அணைத்தாலும்
உள்ளங்கள் ஒவ்வாது
உடல்கள் பிரிகின்றன
உயிரற்ற ஜடங்களாய்
ஊடலின் தாக்கம்
உள்வரை ஏக்கம்

நினைவுகள்
நாம் செதுக்கி வைத்த சிலைகளாய்
நிஜங்கள்
மனக்கண்காட்சியில் நிழல்களாய்.
நெருடல்கள்
நீ தீண்டிச்சென்ற வருடல்கள்
குமுறல்கள்
நான் விசும்பும் உளறல்கள்

ஆனால்...
உனக்கான என் நினைவெல்லாம்
பொத்தல் பொத்தலாய்
அழிக்க இயலாத கறையாய்
வலிக்க வலிக்க நீங்காத துயராய்
திரும்பத் திரும்ப ரீங்கரிக்க

ஒதுக்கினாலும் ஓடி வந்து
என்னைதொடுகின்றன அலைகளாய்,

நீ என் மேல் அமிலமாய்
உமிழ்ந்து விட்டுப் போன
இறுதிச் சொற்கள்,
இன்னும் என்னை சுட்டபடி...

எழுதியவர் : செல்வமணி (5-Nov-15, 11:38 pm)
பார்வை : 389

மேலே