காதலின் தோல்வி

கண்கள் பார்க்க
காதல் பிறந்தது
நெஞ்சம் இனிக்க
நாளும் நகர்ந்தது
சொல்லாத வார்த்தைகள்
காதில் ஒலித்தது
சொர்க்க பூமியாய்
காட்சி விரிந்தது ..
சொல்லென்று ஒரு
மனதும்
பொறுவென்று ஒரு
மனதும்..
சொல்லாமலே ஓடியது
காலமும்..
இன்று நீயொரு ஊரில்
உன் குடும்பத்தோடு
நானொரு ஊரில்
என் குடுப்ம்பத்தோடு
இந்த நாளும் மகிழ்ச்சியாய்
தான் இருக்கிறது..
இது காதலின் தோல்வியல்ல..
நம்மின் காதல்தோல்வி மட்டுமே..

-சங்கர் நீதிமாணிக்கம்

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (8-Nov-15, 9:33 pm)
சேர்த்தது : நீ சங்கர்
பார்வை : 73

மேலே