மீண்டும் மீண்டும்

அரை மணி நேரத்திற்கு முன்
பேசிய செல் போன் கானவில்லை
நேற்று எங்கோ வைத்த பர்ஸ்
வேலை காரியின் அதட்டலுடன்
இன்று தான் கிடைத்தது,
போன வாரம் மனைவி வாங்க
சொன்னதையும் மறந்து விட்டேன்,
சென்ற மாதம் வாசித்த புத்தகத்தின்
எழுத்தாளனின் பெயரை மாற்றி சொன்னேன்,
இப்படி எத்தனையோ மறதிகளை அடுக்கி கொண்டே போகலாம்
சலிப்பூட்டும் இந்த மறதிக்கு நடுவே
நான் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பது மட்டும் நினைவில்.
-இரா.மீ.தீத்தாரப்பன்.

எழுதியவர் : இரா.மீ.தீத்தாரப்பன் (13-Nov-15, 6:27 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 155

மேலே