பசிக்காமையில் புசிக்காமை

பணம் இல்லா மனிதன்
பலஹீனமாவது போல்
பசி இல்லா மனிதன்
சுகமில்லாதவன் ஆகிறான்;

வேளா வேளை சாப்பிட்டால்
ஜீரணமாகாது,
வேளா வேளை
வேலை செய்தால் மட்டுமே
ஜீரணமாகும்;

இல்லையேல் இரப்பைகள்
இந்திய ரயில்வே துறைபோல
குறித்த நேரம் தவறியே
குந்தகம் விளைவிக்கும்..

காலை மாலை
குறித்த நேரம் தவறினால்
கண்ட நேரம் வந்து
கதவை தட்டும்
எமர்ஜன்சியாய்..

(சும்மா தமாசுக்கு...)

எழுதியவர் : செல்வமணி (14-Nov-15, 8:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 153

மேலே