உரிமைகள் பறிக்கப்படும்-7
நீ
பதவி எனும் மோகத்தில்
உந்தன் இருக்கையின்
கடமையை மறக்கும் போதும்........
நீ
அகங்காரம் எனும்
ஆணவத்தால் உந்தன்
கண்ணியம் கரையும் போதும்.....
நீ
சாதி-மத பேதம்
கொண்டு உந்தன்
கட்டுபாட்டை கடக்கும் போதும்......
தனிமனித வளர்ச்சி
தடைபட்டு நம்
நாடு வல்லரசாகும்
உரிமைகள் பறிக்கப்படும் –உன்னால்
என்பதை மறவாதே !.....
-தஞ்சை குணா