வெள்ளம்
வெல்லத்தைப் போல் நான் இனிப்பதில்லை
அணை தாண்டிப் போவதால்
யாரும் எனை ரசிப்பதில்லை
தேடி வறண்ட நாக்குதான்
திட்டித் தீர்க்க மறப்பதில்லை
ஆடி முடிந்து போனபின்
வெள்ள நிவாரணம் விடுவதற்கில்லை
என் வீட்டில் வீட்டைக் கட்டி
எனைத் திட்டும் மானுடமே
உன்னாசை ஒழிந்தால் ஒழிய
உனக்கு விடிவு வேறில்லை