மனிதா கேள்
தோன்றும் போதே கோடி பேரை தோற்கடித்து வென்றோமே
பின்னர் வாழும்போது வெற்றிக்காக மனிதத்தை கை விட்டோமே
விழிக்கு விழி பழிக்கு பழி
வழியும் ரத்த ஆறுகள் இங்கே
இயற்கையே உனக்கேன் சிரமம் எங்களை அழிக்க
செயற்கையாகவே அழித்து கொள்(ல்)வோம் உன்னையும் சேர்த்தே...
மனிதா கேள்....
காலம் எல்லாம் சேர்த்து வைத்த வெற்றிகளை தந்தாலும்
காலன் அதை ஏற்றிடான் கடமைநின்று தவறிடான்
காலில் விழுந்து கெஞ்சினாலும் கயிறு வீச அஞ்சிடான்