எம் பேர செல்வன் முத்தையா-ன்னு எழுதுடா

சின்னத் தாத்தா ஆதார் அட்டை வாங்க இந்த விண்ணப்பத்தில உங்களப் பத்திய வெவரங்கள எழுதிருக்கேன். சரியான்னு பாருங்க.


என்னடா எம் பேர திரு. முத்தையா-ன்னு எழுதிருக்கே. எனக்கு எப்படா கல்யாணம் பண்ணி வச்ச? நான் கட்ட பிரமச்சாரின்னு உனக்குத் தெரியாதா? செல்வன் முத்தையா -ன்னு எழுதுடா.


இல்ல தாத்தா உங்களுக்கு வயசு 85 ஆகுது. உங்க பேருக்கு முன்னாடி செல்வன்-னு எழுதினா நல்லா இருக்காதுங்க சின்னத் தாத்தா.



ஏண்டா எல்லாம் சமத்துவம் பத்திப் பேசறீங்க. உங்க சமத்துவம் வெறும் பேச்சோட தானா?


நீங்க சொல்லறது ஒண்ணும் புரிலீங்க சின்னத் தாத்தா.

ஏண்டா கல்யாணம் ஆகாத பாட்டிக்கு நூறு வயசு ஆனாலும் செல்வி. என்ன மாதிரி கல்யாணம் ஆகாத வயசான ஆண்கள் எல்லாம் இளிச்சவாயர்களா? டேய் நான் செத்த அப்பறம் கூட மரண அறிவிப்பு, கருமாதிப் அறிவிப்பு, ஒவ்வொரு வருசமும் செய்தித் தாளுக்க்க் குடுக்கும் நீத்தார் நினைவு விளம்பரத்தில கூட "செல்வன் முத்தையா அவர்கள்"ன்னு தான் எம் பேரப் போடணும்.

சரிங்க தாத்தா. நீங்க சொல்லறது சரி தான். நீங்க நூறு வருசம் உடல் நலத்தோட வாழணும் தாத்தா.

எழுதியவர் : மலர் (22-Nov-15, 10:40 pm)
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே