இயற்கையின் சீற்றம்

இயற்கையை அழிப்பதில்
கடும் போட்டி கொண்டு
காடுகளை அழித்தோம்
காற்றின் தூய்மையை
இரக்கமின்றி கெடுத்தோம்
இப்போது வீடுகளில் வெள்ளம்.


இது இயற்கையின் எச்சரிக்கை
இனியேனும் திருந்தி
இயற்கை விதிகளை மதித்தால்
நம் வாரிசுகள் வாழ
வழி கிடைக்கும் உலகில்

எழுதியவர் : மலர் (23-Nov-15, 12:33 am)
Tanglish : iyarkaiyin seetram
பார்வை : 105

மேலே