வான் மழை

தமிழ் இந்து

மழைக் கவிதை

வெள்ளத்தில் சென்னை வெள்ளம்

வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா - வருணா

எம்மிடம் அருள் செய்யடா...

குடியேற இடம்தேடி

கூடாத செயல் செய்து

ஏரிகள் தூர்த்தோமடா - வருணா

உன்னிடம் தோற்றோமடா...

கால்வாய்க்கு வழியில்லை

நீர்வடிய வழியுமில்லை

வீடுகள் மிதக்குதடா - நீயும்

தண்டித்தல் அறமல்லடா...

மழைவெள்ளம் வடியாமல்

மனம்நொந்த மக்களுக்கு

தாயுள்ளம் காட்டிடடா - வருணா

ரேஷனில் மழை பெய்யடா...

நன்றி தமிழ் ஹிந்து

எழுதியவர் : (23-Nov-15, 11:41 pm)
பார்வை : 92

மேலே