வான் மழை
தமிழ் இந்து
மழைக் கவிதை
வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா - வருணா
எம்மிடம் அருள் செய்யடா...
குடியேற இடம்தேடி
கூடாத செயல் செய்து
ஏரிகள் தூர்த்தோமடா - வருணா
உன்னிடம் தோற்றோமடா...
கால்வாய்க்கு வழியில்லை
நீர்வடிய வழியுமில்லை
வீடுகள் மிதக்குதடா - நீயும்
தண்டித்தல் அறமல்லடா...
மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா - வருணா
ரேஷனில் மழை பெய்யடா...
நன்றி தமிழ் ஹிந்து