மலர்மதி

பூமகள் ஒருத்தி
மலர் ஏந்தி
காற்றை வரவேற்கிறாள் ....

மலர்வாசம் காற்றுடன்
கலக்கும் தருணம் ....

வெண்மேகம் பூமழை
பொழியும் நேரம் ....

கடல் அலையாடிக்க மறந்து
கவிதை பாட நினைக்கும் ....

வானில் பறவை பறக்க
மறந்து பேச நினைக்கும் ....

வானில் சூரியன் மறைய
மறந்து பூமழை பொழியநினைக்கும் ......

நீலவானம் வண்ணம் நிறைந்த
வான வில்லாக மாறும் ....

ஆகாயம் கலைய மறந்து
ஓவியம் வரையும் ....

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (10-Dec-15, 3:00 pm)
பார்வை : 90

மேலே