மது கிறுக்கனும் - மனைவியின் உருக்கமும்

அட வெட்கம் கெட்ட மனிதர்களே…..!
நீங்கள் வெளிச்சத்து வாருங்களே….!
ஆமா;
நீங்களெல்லாம் வெளிச்சத்துக்கு வாருங்களேன் !

துண்டாலே திரைப்போட்டு மறைக்கத் தேவலையே..
மதுவை மறைக்கத் தேவலையே… !
உங்களுக்கு
மதுவை மறக்கத் தோனலையே.. !
ஆமாமா...
மதுவை மறக்கத் தோனலயே..!
உங்களுக்கெல்லாம்
வாழ்க்கையின் அர்த்தம் புரியலையே….!

மதுவை குடிச்சுப்புட்டு;
மலை போதை ஏத்திக்கிட்டு,
மனசை வித்துப்புட்டு;
மனைவியை அடிச்சிக்கிட்டு…
வீதியெல்லாம் ஆட்டம் போடுறீயே…!
நடு வீதியெல்லாம் ஆட்டம் போடுறீயே…..!

நீயெல்லாம் மனசனில்ல..;
உனக்கெல்லாம் மானமில்ல..,
சூடுயில்ல…., சுரனையில்லையே…!
உங்களுக்கெல்லாம்
சூடுயில்லை…., சுரனையில்லையே…!

நாளெல்லாம் உழைச்சிப்புட்டு,
உழைச்சதை குடிச்சிப்புட்டு
ஊரெல்லாம் சண்டையிட்டு;
உதையும் வாங்கிக்கிட்டு
வீடுவந்து சேருறீயே..!
வாய்க்கு ருசியாவும் கேட்குறீயே..!

சம்பாதிக்கும் பணத்தைவச்சி;
சம்சாரம் தலையெடுக்க
சம்சாரி உனக்கெல்லாம்
சந்தோஷமாய் வாழத்தெரியலயே….!
படுபாவி உனக்கெல்லாம்
பாசத்தை பொழியத்தெரியலயே..!

குடும்ப பொறுப்பை ஏத்துக்கிட்டு;
குடிதன்னை விட்டுப்புட்டு,
குலம்தன்னை காத்துக்கிட்டு;
குன்றாக நின்று வந்தா..
குறையில்லாம வாழ்ந்து வரலாம்;
நீங்களெல்லாம்
வாழ்க்கையில் கொடிக்கட்டிப் பறந்து வரலாம்…!

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகமுன்னு
பெரியவங்க சொல்லுவாங்க !
அவங்க
பெருமையுடன் சொல்லுவாங்க !
அவங்க பேச்சுகளை
நீங்களெல்லாம் கேட்டுக்கிட்டு,
உங்களால முடிங்சவரை
நன்மைகளை செய்துக்கிட்டு,
நலமுடன் வாழ்ந்து வரனும் !
நீங்களெல்லாம்
சுகபோக - தன(ம்)முடன் வாழ்ந்து வரனும் !

எழுதியவர் : இரா.மணிமாறன் (13-Dec-15, 9:04 pm)
பார்வை : 118

மேலே