மகிழ்வுடன் வாழ மருந்து இதோ

இல்லை இல்லை பிதற்றி அலையும் கூட்டமே ..

உனக்கு செருப்புதான் இல்லை
உன் முன் இருப்பவனுக்கு காலே இல்லையடா ...

உனக்கு வளையலும் மோதிரமும்தான் இல்லை..
அதோ அங்கு நிற்பவனுக்கு கையே இல்லையடி

உனக்கு காதணி தான் இல்லை..
உன் பணக்கார தோழிக்கு காதணி இருந்தும் காது கேட்கவில்லையடி ..

உனக்கு கண் மைதான் இல்லை..
கூட்டத்தில் குழந்தைக்கு பார்வையே இல்லையடி ..

உனக்கு பிடித்த உணவுதான் இங்கில்லை
மக்களுக்கு உணவே இல்லையடா,,


உனக்கு மேலுள்ளவனின் வாழ்க்கையை பாராதே..
பொறாமையும் ஏமாற்றமுமே மிஞ்சும்..

உனக்கு கீழ் உள்ளவனின் நிலையை பாரடா ..
நீ எவ்வளவு உயரத்தில் இருக்கிறாய் என புரியும்..

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தடா மூடா..

இருப்பதை வைத்து சிறப்புடன் வாழடா ..

வாழ்க்கையை ரசித்து ருசிப்பாய்...

எழுதியவர் : fathima shahul (14-Dec-15, 1:24 pm)
பார்வை : 198

மேலே