வாழையடி வாழை
* 'மானம்
மரியாதை ' என
முறுக்கிய
மப்புத் தாத்தாவின்
மீசையை
உறங்கும்போது
மழித்து விட்டான் பேரன்...!
* காலையில்
பெருங்கலவரம் மூண்டு ;
நிகழ்வு புரிந்து
தன்னுள் முனகுகிறார்...
' நான் ...
தலைமுடியையும்
சேர்த்து மழிச்சேன் ;
பெயபுள்ள...
இது எவ்வளவோ
பரவாயில்ல ...! '