போரும் அமைதியும்

* அவசர கோலத்தில்
அனைத்தையும்
தின்று விட்டேன்

பஞ்சு மிட்டாயை..!!

* வந்ததே ரவுத்திரம் ...

ஆதலால் நிகழ்ந்தது;
வரலாறு காணா
யுத்தம்

அவளுக்கும்
எனக்கும்...!

* மறுநாள்...
பொறுக்கி வந்த - நாவல்
பழங்களையெல்லாம்

அள்ளிக்கொடுத்தேன்
வள்ளலாய்
பள்ளிப்பருவத்தில்...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (17-Dec-15, 4:07 pm)
பார்வை : 72

மேலே