வடிந்த வெள்ளம் வடியாத சோகம்
வருண பகவான் வாரி இறைக்க ....
தன் தடுப்பு சுவர் தாண்டி ....
ஊர் காண வந்திட்ட வெள்ள நீரால் ......
காணும் வழி எங்கும்
இடுப்புக்கு மேல தண்ணிர் .......
இது வரை சேர்த்தது எல்லாம் .....
தண்ணிரில் உருண்டோட ......
கண்கள் எனும் கரை தாண்டியது கண்ணிர் .....
ஒன்றுமே அறியாத ஒரு வயது மழலையை
நெஞ்சோடு நான் சேர்த்து ......
கரையேற நின்றிட்ட அந்த ஒரு கண துளிகள்
சொல்லிய பாடம் மட்டும் நெஞ்சத்தை சுட்டதம்மா ....
பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் ....
இறைவா !
என் மழலை பசியாற ...
ஒரு கவளம் பால் போதும் என வேண்டி ....
யாசித்து நின்றிட்ட அந்த ஒரு கண துளிகள்
சொல்லிய பாடம் மட்டும் நெஞ்சத்தை சுட்டதம்மா ..
ஆம் ...விதியது ...... வலியது என ....
சொல்லிய பாடம் மட்டும் நெஞ்சத்தை சுட்டதம்மா
வெள்ளத்தை தாண்டி விட்டேன் ...
என்ற போதும் .....
இனி எங்ஙனம்.......?
நான் வாழ்வுதனை தாண்டிடுவேன்
என கலங்கி நிற்கின்றேன் .....