நான் என்ற பித்தன் நான் - உதயா

இன்றைய விடியல்
எனக்கானது
இந்த கணம்
என் கையில் உள்ளது

இந்நாளின்
பகலவன் நானே
இருளவன் நானே

நிகழ்நொடி ஓட்டத்தின்
கடவுளும் யாமே
உயில் கள்வனும் யாமே

கண்ணீருக்கும்
புன்னகைக்கும்
நான் சிறைச்சாலை
இல்லை

நான் யாதையும்
சிறையெடுப்பதில்லை
அன்பெனும் உணர்வில்
என் பெயர் மட்டும்
அகப்படுவதை தவிர
நான் எதையும்
விரும்பவில்லை

நான் ஒரு பறவை
உணர்ச்சி வசத்தில்
சிறகினை விரித்து
செயலில் மோட்சமிட்டு
மீண்டும் என்சிறகை
வளர்த்தெடுப்பேன்

என் நாட்டின் மீது
தீரா பற்றுள்ள
தீவிரவாதி நான்

என் தமிழ் மீது
தணியா தாகமுடைய
பயங்கரவாதி நான்

என்னை நீதியிலும்
தர்மத்திலும் வெல்ல
எவனும் இல்லையென்ற
ஆணவமுள்ளவன் நான்
என்னை வெல்பவனை
கண்ணில் காண
தவம் புரிபவனும் நானே

இப்பாரில்
என் பயணத்தை
இயன்ற அளவுக்கு
விரட்டி
பயணத்தின் நிழலில்
பிறருக்கு சுகமளிக்கும்
நானொரு
தேடல் பைத்தியக்காரன்

எழுதியவர் : உதயா (20-Dec-15, 1:36 pm)
பார்வை : 304

மேலே