கிறிஸ்துமஸ்

விண்ணிலே ஒரு அதிசயம் !
வீருகொண்டு வந்த விண்மீன்!
பாலகன் பிறக்கின்றார்,
பாவிகளை மீட்க,
பரலோகத்திலிருந்து!
ஏழ்மையை விளக்க
ஏழையாய் அவதரிக்கின்றார்!
மரியா,யோசேவின்
மகனாய் பிறக்கின்றார்!
ஒடுக்கப்பட்டோரை
ஒருங்கிணைக்கவும்,
கைவிடப்பட்டோர்களுக்கு
கண்ணியம்தரவே,
கர்த்தராய் வருகிறார்!
கருணை இல்லங்களில்
கடவுள் இருக்கிறார்!
ஏழைகள் மனதில்
இயேசு இருக்கிறார்!
ஈருலகில் இறைஅருள் வேண்டி,
அன்பைவெளிப்படுத்தி,
ஆனந்தமாய் கொண்டாடுவோம்!
அன்போடு கொண்டாடுவோம்!