முதல் வலி
முதல் வலியொன்று நான் கண்டேன்
தாயின் பிரிவிலே
இரணடாம் வலியொன்று நான் கண்டனே்
குற்ற உணர்ச்சியிலே
மூன்றாம் வலியொன்று நான்கண்டேன்
காலை பின்னே வந்த என் நிழலும் முன்னே செல்லையிலே
நான்காம் வலியொன்று நான் கண்டேன்
நான் சுமந்த சுமைகளலெ்லாம் தாய்லாங்கடையிலே தொங்குகையிலே ,நான் சுமந்த என் மகனும் என்னை சுமையென தூற்றையிலே
ஐந்தாம் வலியொன்று நான் கண்டேன்
என் முதுமையிலே
ஆறாம் வலியொன்று நான் கண்டேன்
மரணத்தின் தருவாயிலே , வாழ்வின் இறுதி கண்ணீர் சொட்டையிலே