இறை வாழ்த்து

காற்றாயும் கடலாயும் பெருகுமொரு ஊற்றாயும் உடலாயும்
மண்ணாயும் மலையாயும் விரிந்தபெரு விண்ணாயும் விதையாயும்
நீராயும் நிறமாயும் நீளுமொரு மரமாயும் உரமாயும்
நிலவாயும் இரவாயும் தகித்திடுமோர் தனலாயும் பகலாயும்
நீக்கமற நிறைந்திருந்து இந்நிலவுலகில் எந்நாளும்
விந்தைபல புரிந்தெந்தன் சிந்தையெல்லாம் சிறைபடுத்தும்
இறையுந்தன் நினைவின்றி என்னுயிருந்தான் நிறைந்திடுமோ?
நின்னருளில்லா வாழ்வுதனில் உவகையுந்தான் உறைந்திடுமோ?
உலகெல்லாம் உயர்ந்திடவே உன்னதமும் உற்றிடவே
நின்னருளால் வளமெல்லாம் குன்றாமல் பெற்றிடவே
அன்புருகி வேண்டுகின்றேன் அருள்புரிவாய் பரம்பொருளே............

எழுதியவர் : சுரேஷ்குமார் (27-Dec-15, 12:05 am)
பார்வை : 1941

மேலே