நினைவுப்பரண்கள்
ஆசைகளுடன்
கோலங்களிட்டு
விடியல்களில் விழிக்கிறோம்!
கனவுகளுடன்
காட்சிகளினைத்து
காத்திருக்கிறோம்!
நகங்களை கடித்துத்துப்பி
நாட்களை மடித்து வைத்து
நிம்மதியிழக்கிறோம் !
முரண்களுடன்
வீடுகளில்
இணைந்துள்ளோம்;
பரண்களிலெல்லாம்
நினைவுகளைத்தான்
சேமித்து பாதுகாக்கின்றோம்;
நிஜங்கள் நிச்சயமாய் எம் இலக்கு
நீட்டுமந்த நிழல்களில்தானே
நம்பிக்கையுடன் பயணிக்கிறோம்!