காதல் தெய்வம்

* ஐந்தரை அடியில் - ஓர்
அலங்கார நிலா;

பட்டுப் பாவாடையை
வலக்கையில் பற்றி - தடாக
படித்துறையில் நனைக்கிறது
பொற்பாதம் ...!

* ஒருகணம்
திடுக்கிட்ட கோபுரம்;

குறுக்கொடிய குனிந்து
எட்டிப் பார்க்கிறது
மூலஸ்தனம்...

அம்மன் சிலை
உள்ளே
இருக்கிறதாயென...!

* அவன்
ஆராதித்து
வழிபடுகிறான் ;

அவளை
வெளியே...!

எழுதியவர் : (27-Dec-15, 3:35 pm)
சேர்த்தது : சுரேஷ்வால்மீகி
பார்வை : 76

மேலே