பார்வை தரிசனம்

என்னவளே!
உன் விழிகளை பிரம்மன் படைத்தானா?
ரவி வர்மா-யை கொண்டு வரைந்தானா?
அழகிய விலை மதிப்புமிக்க
ஓவியம் போல் உன் விழிகள்.....
உன் பார்வை தரிசனம் பெற காத்திருக்கிறேன்
உன் பக்தனாக பலவருடங்களாக......
தரையை பார்த்து செல்லும் விழிகள்
என்னை ஒரு முறையாவது பார்க்காதா
பார்வை தரிசனம் கிடைக்காதா
என்ற எல்லையற்ற ஆசைகளுடன்.