சாரல்

சாரல் ...
மூன்றெழுத்து வார்த்தைக்குள்
மறைந்திருப்பது
மழையின் அழகு !

என்னை தீண்டிவிட
துடிக்கும் மாமழையே
மன்னிப்பாயாக
குடையுடன் சென்றது என் பிழையே !

மழையில் நனையும்
ஆசையை
குடைக்குள் மறைக்கிறோம் !

மழை எனும் இரண்டு எழுத்து சொல்
பிழை இல்லாமல் அழகு என
பொருள் கொள்கிறது
சாரல் எனும் முன்றெழுத்து தமிழில் !

தூரலில் தொடங்கி
சாரலில் தொடர்ந்து
மண்ணுள் மடியும் மழை.

நம் மீது படர்ந்திருக்கும்
கரைகளை அழிக்க
அனுப்பி வைத்தானோ
இறைவன் மழை சாரலை ! ...

எழுதியவர் : Meenatholkappian (3-Jan-16, 7:06 pm)
Tanglish : saaral
பார்வை : 1411

மேலே