சாரல்
சாரல் ...
மூன்றெழுத்து வார்த்தைக்குள்
மறைந்திருப்பது
மழையின் அழகு !
என்னை தீண்டிவிட
துடிக்கும் மாமழையே
மன்னிப்பாயாக
குடையுடன் சென்றது என் பிழையே !
மழையில் நனையும்
ஆசையை
குடைக்குள் மறைக்கிறோம் !
மழை எனும் இரண்டு எழுத்து சொல்
பிழை இல்லாமல் அழகு என
பொருள் கொள்கிறது
சாரல் எனும் முன்றெழுத்து தமிழில் !
தூரலில் தொடங்கி
சாரலில் தொடர்ந்து
மண்ணுள் மடியும் மழை.
நம் மீது படர்ந்திருக்கும்
கரைகளை அழிக்க
அனுப்பி வைத்தானோ
இறைவன் மழை சாரலை ! ...