நட்பூக்களே

நட்பூக்களே
* * * * * * * *
அந்த அகன்ற வெளியில்
தொலைந்து வட்டமிடும்
ஆலா போல
என் ஆழ்மன வெளியில்
சூரியனாய்
சுற்றிச் சுற்றி நீ ....!
வெளிச்சமாய் கிடந்த
உன்னை
கார்முகில் மறைக்க
காரணம். .....?
பொய்யற்று போலியற்று
தேவைக்கேற்று தெரிவாயா ?
முகம் காணப் புகழ்ந்து
வஞ்சித்து மறைவாயா ?
உறவாடி உள் புகைந்து
உயிர் களைந்து செல்வாயா ?
களவாடி கதை நகைத்து
உயர்வு தாழ்வு பார்ப்பாயா ?
வாயார வசை பாடி
வசதி கண்டு சேர்வாயா ?
வலியற்று வாதமற்று
வேதனைகள் தகர்ப்பாயா ?
நலிவடைந்த கணங்களையே
நகர்த்தி விட்டுப் போவாயா ?
என் பாத்திரம்
உன் நேத்திரத்தில். .....!
- பிரியத்தமிழ் -