நட்பூக்களே

நட்பூக்களே
* * * * * * * *

அந்த அகன்ற வெளியில்
தொலைந்து வட்டமிடும்
ஆலா போல
என் ஆழ்மன வெளியில்
சூரியனாய்
சுற்றிச் சுற்றி நீ ....!

வெளிச்சமாய் கிடந்த
உன்னை
கார்முகில் மறைக்க
காரணம். .....?

பொய்யற்று போலியற்று
தேவைக்கேற்று தெரிவாயா ?

முகம் காணப் புகழ்ந்து
வஞ்சித்து மறைவாயா ?

உறவாடி உள் புகைந்து
உயிர் களைந்து செல்வாயா ?

களவாடி கதை நகைத்து
உயர்வு தாழ்வு பார்ப்பாயா ?

வாயார வசை பாடி
வசதி கண்டு சேர்வாயா ?

வலியற்று வாதமற்று
வேதனைகள் தகர்ப்பாயா ?

நலிவடைந்த கணங்களையே
நகர்த்தி விட்டுப் போவாயா ?

என் பாத்திரம்
உன் நேத்திரத்தில். .....!

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (5-Jan-16, 10:25 pm)
பார்வை : 415

மேலே