உன் நினைவு
மாலை நேரத்து
மழைத் தூரல்..!!
மனதோடு கொஞ்சம்
உன் நினைவுச் சாரல்
ஆழமாய் கொஞ்சம்
வலித்தது..! !
நீ இல்லாத
நான்...
என்னை நினைக்க
விரும்பாத நீ
நமக்குள் ஏன் இப்படி
ஓர் இடைவெளி...!!
வெறுப்பாய் கொஞ்சம்
சிரிக்கிறேன்..
நெருப்பாய் கொஞ்சம்
எரிகின்றேன்..ஆம்
நான் இப்பொழுதெல்லாம்
நானாக இல்லை..!
உன்னை மறக்க நினைத்து.. இன்னும்
நினைத்து கொண்டு நான்
என்னை நினைப்பதாய்
கூறி மறந்து விட்டு
நீ...
நமக்குள் ஏன் இத்தனை
வேதனைகள்..??
தன்னை
அறுப்பதாய் உன் இதயம் அழ
நீ மறுப்பதாய் நான் அழ..
உனக்கு வலிக்கிறதா??
சரி.. நான் மறந்து செல்கின்றேன்
உன்னையல்ல என் உயிரை..