என்றும் வாழ்கவே

என்றும் வாழ்கவே!
கம்பனின் கற்பனையும்
தோற்று நின்றது!
எனது காதல் கடிதங்களின்
வர்ணணைகள்!
காதலியோ……..
காதல் கடிதங்களையும்
என்னையும் ஏனோ
கண்டுகொள்ளவே இல்லை!
பதில் பெறா
காதல் கடிதங்களில்
கொட்டி தீர்த்த
கற்பனை வர்ணணைகளை
கவிதைகளாகவே
தாட்களில் வடித்தேன்!
கவிதைகளான
கற்பனைக் கொட்டல்களை
பதிப்பித்தார்கள்
சிறந்த காதல் கவிதைகள்
என்றே…..?
என்னையும்
கவிஞரென்றார்கள்!
காதல் கடிதங்களையும்
காதலையும்
நிராகரித்த நீள்விழியாள்
எனது காதல் கவிதைகளை
காசு கொடுத்தே …?
வாங்கி சென்றாள்
படிப்பதற்கு….?
காதலனாக
ஏற்காதவள்
கவிஞனாகாவது!
ஏற்றாளே எழிரசி
என்றும் வாழ்கவே!
----- கே. அசோகன்